விக்ரம் லேண்டரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவிப்பு…!!!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பிய நிலையில் அதன் கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டர் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பை இழந்துள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்த நிலையில் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் ஒன்றிணைந்து கொண்டது. அதையடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள ‘ஹலோ விக்ரம்’ என குறுஞ்செய்தியை நாசா அனுப்பி வைத்துள்ளது.
ஏற்கனவே நாசா நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய புலனாய்வு ஆர்பிட்டரைக் கொண்டு, விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பவும், சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிரையில் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை எனவும், சமிக்ஞை மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.