வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யும் புதிய வசதி…!!!
மெசன்சர் அப்பிளிக்கேஷனான வாட்ஸ் ஆப் உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இது பில்லியன் கணக்கான பாவனையாளர்களை கொண்டுள்ளது. வாட்ஸ் ஆப் தொடர்ந்தும் தனது புதிய வசதிகளை அறிமுகம் வருகின்றது. வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யும் புதிய வசதிகளை அவதானித்து அதை பாவனையாளர்களுக்கு கூறுவதில் WABetaInfo முக்கிய பங்கு வகிக்கின்றது. WABetaInfo வெளியிட்ட புதிய தகவலின் படி Android மற்றும் iOS சாதனங்களுக்காக வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னரே அதிகமான சாதனங்களில் ஒரே வாட்ஸ் ஆப் கணக்கினை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த வாட்ஸ் ஆப் வசதியானது ஹேக்கர்கள் பாவனையாளர் ஒருவரின் கணக்கினை வேறு சாதனங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு வேறு பாவனையாளர் ஒருவரது கணக்கினை பயன்படுத்த முனைந்தால் உரிய நபருக்கு வாட்ஸ் ஆப்பில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும். அதேபோல் ஒரு நபரை வாட்ஸ் ஆப்பில் ஒன்றிற்கு அதிகமானவர்கள் ப்ளாக் (Block) செய்தால் அவர்கள் அனைவரது கணக்குகளையும் ஒரே குழுவின் (Group) கீழ் காண்பிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.