கூகுளின் அன்ரோயிட் சாதனங்கள் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!!
கூகுள் என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூகுள் நிறுவனம் செயற்படுகிறது. உலகளவில் கூகுள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
கூகுளின் அன்ரோயிட் இயங்கு தளத்தை கொண்டு அறிமுகமாகும் சாதனங்கள் தொடர்பாக புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை என்னவென்றால் இந்த சாதனங்கள் முன்பே உருவாக்கப்பட்டு வரும் அப்பிளிக்கேஷன்கள் மிக ஆபத்தானவை என கூறப்பட்டுள்ளது. Kryptowire எனும் மொபைல் சைபர் பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்த ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின் போதே Asus, Samsung, Xiaomi போன்ற மொத்தம் 29 மொபைல் உற்பத்தி நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்ட அன்ரோய்ட் சாதனங்கள் காணப்படுகின்றன. அதைக் கொள்வனவு செய்யும் போதே அந்த சாதனங்களில் உருவாக்கப்பட்டிருந்த அப்பிளிக்கேஷன்கள் தொடர்பாக சுமார் 146 வரையான பாதிப்புக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சாம்சுங் சாதனங்களிலேயே அதிகளவான பாதிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.