பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் புதிய பாவனையாளர்களுக்கு தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்தி கணக்கினை உருவாக்க முடியாது!!
பேஸ்புக் 2004 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். உலகளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் நிறுவனம் ஒன்றாகும். இந்த பேஸ்புக் பில்லியன் கணக்கான பாவனையாளர்களை கொண்டுள்ளது.
அந்த வகையில், பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சட் செய்யும் அப்பிளிக்கேஷனான பேஸ்புக் மெசஞ்சர் மிகவும் பிரபல்யம் அடைந்ததாகும். மேலும் இந்த அப்பிளிக்கேஷனில் கணக்கினை தொடங்குவதற்கு மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் நம்பரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
இருப்பினும் இனி வரும் காலங்களில் புதிதாக இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி மெசஞ்சர் கணக்கினை தொடங்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவானது புதிதாக பேஸ்புக் மெசஞ்சரில் இணையவிருப்பவர்களுக்கு பாதிப்பாக மாறியுள்ளது. இருப்பினும் முன்னரே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு இதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப இணையத்தளமான VentureBeat இந்த தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.