விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுக்கவுள்ள நாசா ஆர்பிட்டர்…!!
சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் படம் எடுக்கவுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவின் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்காக சிறிது தொலைவில் இருந்த நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த நாசா, விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
நேற்றைய தினத்தில் இருந்து நாசா விக்ரம் லேண்டருக்கு “ஹலோ ” என்ற மெசேச்சையும் அனுப்பி வருகிறது. இந்த நிலையில் நாசா கடந்த 2019 ஆம் ஆண்டு அனுப்பிய ஆர்பிட்டர் அடுத்த சில நாட்களில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை கடக்க இருப்பதாகவும் அப்போது அதனை புகைப்படம் எடுக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் புகைப்படங்களை நாசா இஸ்ரோவுக்கு அனுப்பிய பின்னர் விக்ரம் லேண்டரின் நிலை என்னவென்று தெரிய வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சீனா நிலவுக்கு அனுப்பிய சாங்கி-3, மற்றும் சாங்கி-4 ஆகிய விண்கலங்களையும், இஸ்ரோ நிலவுக்கு அனுப்பி விழுந்து நொறுங்கிய பெர்சீடிஸ் விண்கலம் போன்றவற்றை நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்தது குறிப்பிடதக்கது.
நன்றி – இந்த காணொலி காப்புரிமை :புதியதலைமுறை நியூஸிற்கு உரித்தானது