17 வயதில் பல பெண்களிடம் பாலியல் சேட்டை செய்த சிறுவன்.! ஸ்ரீபெரும்புதூர் பொலீஸாரின் அதிரடியால் தெரிய வந்த உண்மைகள்.!!
மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை 17 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே புது நல்லூர் பகுதியில் தாயுடன் மன நலம் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் அதே பகுதியை தனபாலன் என்ற 17 வயது சிறுவன் அடிக்கடி குறித்த பெண்ணை சீண்டியுள்ளான்.
பின்னர் தாயார் வெளியே சென்ற தருணம் பார்த்து குறித்த பெண்ணை மிக மோசமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார், யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் கூறியுள்ளான், வெளியே சென்று வீட்டுக்கு வந்த தாயார் மகளின் நிலை கண்டு பதறி ஸ்ரீபெரும்புதூர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் மன நலம் பாதிக்கப் பட்டவரை 17 வயது சிறுவனான தனபாலன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப் பட்ட தனபால் இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி விடுதலை ஆன சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது, இந்த வயதில் தனபாலனின் செயல் அனைவரையும் அதிர வைத்த நிலையில் தற்போது கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.!!