தனி நாடு கேட்ட தமிழீழ விடுதலை புலிகளை அழித்தது மிகப் பெரிய தவறு..! பெளத்த தேரர் கவலை..!
தமிழீழம் கேட்டு போராடிய தமிழீழ விடுதலை புலிகளை அழித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம் என சர்ச்சைகுரிய ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த போதெச் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இனவாதிகளின் பிடியில் நாடும் நாட்டு மக்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருகின்றனர். இஸ்லாமிய பயங்கர வாதிகள் முழு இலங்கையையும் அடிமையாக்க முயற்சி செய்கின்றனர். நிச்சயம் அதுக்கு இடம் கொடுக்க மாட்டோம்.
இது சிங்கள பெளத்த நாடு இந்த நாட்டை தீவிர வாதிகளிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. அந்த கடமையை தேரர்களாகிய நாம் இனி செய்வோம். இந்த நாட்டில் தமிழ், முஸ்லீம், பறங்கியர், என அனைவரும் வாழ்கின்றனர்.
இங்கு அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும். பெளத்த பூமியில் அமைதியும் சுதந்திரமுமே முக்கியமானது. இதனை கெடுக்கும் இஸ்லாமிய தீவிர வாதிகளை வேரோடு அழிப்போம் …2009 திற்கு முன் ஒரு இஸ்லாமிய தீவிர வாதிகூட இலங்கைகுள் வர நினைக்கவில்லை.
இதற்கான காரணம் புலிகள் மீதான பயமாக இருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் முழு இலங்கையையும் கேட்கவில்லை தமிழீழம் மட்டுமே கேட்டனர். அவர்களால் நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை. விடுதலை புலிகளை அழித்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம் என கூறியுள்ள அவர் ஆட்சி மாற்றுவது மாற்றாமல் விடுவது உங்கள் கடமை என தெரிவித்துள்ளார்..!