அநியாயமாக பறிபோன அப்பாவி இரு உயிர்கள்.! இளைஞர்களே ஜாக்கிரதை.!!
அதிக வேகத்தால் இரண்டு உயிர்கள் பலியான சம்பவம் உறவினர்கள் குடும்பத்தார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் வசித்து வரும் தனுஜன் பரமேஸ்வரன் மற்றும் கொழும்பில் வசித்து வரும் டினேகா ஆகியோரை இவ்வாறு பலியாகி உள்ளனர்.
மட்டக்களப்பில் சொந்தமாக போக்குவரத்து சேவை வைத்திருக்கும் தனுஜன் திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தை. இவரது உறவினராக வினோகா கொழும்பில் வசித்து வருகிறார். இவரை அழைத்து வரச் சென்ற தனுஜன் அதிக வேகத்தில் காரை செலுத்தியுள்ளார்.
வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் வேகக் கட்டுப் பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வினோகா மற்றும் தனுஜன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் விபத்தை கண்டதுடன் உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.!!