உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் களமிறங்கும் வடமாகாணத்தை சேர்ந்த இரண்டு யுவதிகள்.!
இங்கிலாந்து லிவர்பூலில் ஜூலை மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் தொடரில் கலந்துகொள்வதற்கு இலங்கையில் வடமாகாணத்தைச் சேர்ந்த எழிலேந்தினி மற்றும் தர்ஜினி சிவலிங்கம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
15வது உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை அணிக்கு இம்முறை வலைப்பந்தாட்ட தரவரிசையில் தனது இடத்தை விட்டுகொடுக்காது முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, மற்றும் ஜிம்பாப்வே, வட அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் மோத உள்ளது.
12 பேர் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் தர்ஜினி சிவலிங்கம் மீது இம்முறையும் மிகப் பெரிய எர்பார்ப்பு உள்ளது. கடந்த வருடம் சிங்கப்பூரில் இடம் பெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில்
இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்தவர் தர்ஜினி சிவலிங்கம் என்பது குறிப்பிட தக்கது. வாழ்த்துக்கள் தர்ஜினி & டீம்..!