ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை….!!!
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயதுடைய ரத்னஸ்ரீ என்ற இளம் பெண்ணொருவர் பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வசித்து வந்தார்.
குறித்த பெண் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக வமிசெட்டி என்ற இளைஞர் அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெங்கம்மா வெளியில் சென்றிருந்த நிலையில் ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
!Advert!
இதை எப்படியோ தெரிந்து கொண்ட வமிசெட்டி ரத்னஸ்ரீ வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன ரத்னஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்த நிலையில் சுயநினைவை இழந்து மயங்கினார்.
பின்னர் வீட்டிற்கு வந்த பாட்டி தரையில் சுயநினைவின்றி மயங்கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கு ரத்னஸ்ரீக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
!Advert!
அங்கு ரத்னஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெங்கம்மா பொலிஸில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.