பொறியியல் பட்டதாரி ஒருவர் 26 வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை…!!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த32 வயதுடைய ஈஸ்வர் ராவ் என்ற பொறியியல் பட்டதாரி ஒருவர் தற்போது சென்னையில் வசித்து வந்தார். அவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திருவான்மியூர் நியூ பீச் பகுதிக்கு சென்ற ஈஸ்வர் ராவ், அங்கிருந்து ஆட்டோவில் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் அமைந்துள்ள 29 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.
பின்னர் அங்கு சென்ற ஈஸ்வர் ராவ் ஆட்டோ சாரதியிடம், இங்கேயே காத்திருங்கள், நான் வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார். ஈஸ்வர் ராவ் வருகைக்காக ஆட்டோ சாரதியும் அங்கேயே காத்துக்கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஈஸ்வர் ராவ் வரவில்லை. இதனிடையே, அடுக்குமாடியின் 26வது மாடிக்குச் சென்ற ஈஸ்வர் ராவ், திடீரென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவசர சேவைக்கும் பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஈஸ்வர் ராவ் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், உறவினர்களும் அவரை கண்டுகொள்வது இல்லை என்பதாலும், மனவேதனையில் இருந்த அவர் இவ்வாறு தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே இது தொடர்பான உண்மைத் தகவல் வெளிவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.