படிக்க விடாமல் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய பெற்றோர்…!! மனவேதனை அடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!
தமிழகத்தில் சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் பெரியம்மாள் தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இந்த பெண் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சரண்யா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். பின்னர் அவரை மீட்டு அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சரண்யாவின் உடலை பார்வையிட்ட மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து சரண்யாவின் தாய் பெரியம்மாள் காவல் நிலையத்தில் தனது மகள் வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை எடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.
05 வருடங்களுக்கு முன்னர் சரண்யாவின் தந்தை இறந்து விட்ட நிலையில் சரண்யாவின் அண்ணன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் சரண்யாவிற்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்ததாகவும், இந்த திருமணத்தில் விருப்பமில்லாத சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.