மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தற்கொலை…!!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய்ப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று இரவு வைத்தியசாலையின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மயூரன் என்பவரே இவவாறு தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் இருந்து இந்த நோயாளி குதித்த நிலையில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.