தசை நார்கள் கிழிந்து அவஸ்த்தை படுகின்றீர்களா….!? இதில் ஒரு கப் குடியுங்கள் போதும்…!!
இன்று எமது பாட்டி தாத்தாவிடம் நாம் சொல்லும் எந்த நோயும் அன்று அவர்களுக்கு தெரியாது…கொஞ்சம் படித்திருப்பவர்கள் கூட இப்படி எல்லாம் போய்கள் இருக்கா என கேட்பார்கள். நாமும் தான் தெரிந்த ஒரு சில நோய்களை சொல்லி சீன் போடுவோம். ஆனால் ஏராளமான நோய்கள் எம்மை இலகுவாக தாக்கும் அபாயம் இருக்கிறது.
சில நோய்கள் வயாதான பின்பு வரும் சில நோய்கள் பிறந்த நொடியில் இருந்து இறப்பு வரை ஒட்டி பிறந்த சகோதர்கள் போல் கூடவே இருக்கும். இதில் இன்று நாம் பார்க்கப் போவது மூட்டுகளில் உள்ள தசை நார்கள் கிழியும் பிரச்சனை பற்றி. சாதாரணமாக வயது அதிகமாகும் போது தான் இந்த நோய் எம்மை தாக்க ஆரம்பிகின்றது. தசை நார் எதனால் கிழிகிறது?
கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி & இரு சக்கர வாகன விபத்தின்போதும் முழங்கால் மூட்டானது, சாதாரண நிலையிலிருந்து திரும்புவதால் தசைநார் கிழிசல் ஏற்படுகிறது., தோள் மூட்டு தசைநார் கிழிவதால், கையை தூக்கும்பொழுதும் நீட்டும்பொழுதும் வலி ஏற்படும். தோள் மூட்டானது வலுவிழந்து காணப்படும்.
இந்த மூட்டுகளில் உள்ள தசை நார்கள் பலம் இழந்து கிழிய ஆரம்பித்தவுடன் வலி ஆரம்பிக்க தொடங்குகிறது. நடக்கவோ பாரமான பொருட்களை தூக்கவோ முடியாமல் கடுமையான வலி ஏற்படுகின்றது. சரி வாங்க இதற்கான தீர்வை பார்க்கலாம்..!
தேன், பாதாம், பட்டைத் தூள், அன்னாசி ஜூஸ், ஓட்ஸ், ஆரஞ்ச் ஜூஸ், பால், முதலில் பால் சேர்த்து ஓட்ஸை அவித்து எடுத்து வௌத்துவிடுங்கள். அடுத்து பாதாம், பட்டைத்தூள், ஆரஞ்சு ஜூஸ், இவற்றை மிக்ஸியில் அடித்து ஓட்ஸுடன் சேர்க்கவும். இந்த கலவையுடன் தேன் கலக்கவும்.
நன்றாக மிக்ஸ் செய்து பின் 1 நிமிடம் அப்பிடியே வைத்துவிட்டு ஓட்ஸ் கலவையை மிக்ஸியில் போட்டு ஜூஸ் போல் அடிக்கவும். இதில் சிறிது அன்னாசி ஜூஸ் சேர்க்கவும். இப்போ ஜூஸ் ரெடி. இதனை தினமும் குடித்து வர சிறந்த பலன் கிடைக்கும்.அத்துடன் பால், நெய், தயிர், வெண்ணெய், இனிப்பு மாதுளை, வாழைப்பழம், திராட்சை, அரிசி, கோதுமை, இந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்..!
செய்வதற்கு கொஞ்சம் சிரமம் என்றாலும் தசை நார் பலம் பெற வேறு எந்த மதுத்துவமும் இல்லை. இதுவே சிறந்த தீர்வு.. இதனை மனதில் வைத்து பயன் பெறுங்கள். அடுத்தவர்களுடன் பகிருங்கள்..!