சிங்கப்பூரில் பெண்ணொருவர் படுத்திருந்த வேளையில் பெற்றோல் ஊற்றி கொளுத்திய நபர்…!!!
சிங்கப்பூர் பார்படோஸில் உடற்குறையுள்ள சகோதரரைப் பராமரித்து வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவர் படுத்திருந்த வேளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் 44 வயதுடைய நேட்டலி கிரிச்லோ என்ற பெண்ணின் கழுத்தை நெரித்தார் பின்னர் அவர் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.
குறித்த பெண்ணை பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இந்த தீ காயத்திற்கு 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடலில் 75 விழுக்காட்டுக்குத் தீக்காயங்கள் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்றதுக்கு என்ன காரணம் என்று குடும்பத்தாருக்குத் தெரியவில்லை என கூறினார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயாரான கிரிச்லோ இரண்டு முறை புற்றுநோயிலிருந்தும் பக்கவாதத்திலிருந்தும் குணமடைந்து வந்தவர். மாதின் சடலத்தைப் பிரிட்டனுக்கு அனுப்புவதற்கு நிதி திரட்டி வருகின்றனர் குடும்பத்தினர்.
பார்படோஸ் பொலிஸார் இந்த சம்பவத்தைச் சரியாக விசாரிக்கவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தீ சம்பவம் தொடர்பில் இதுவரைக்கும் யாரையும் கைது செய்யவில்லை என குடும்பத்தார்தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.