பொங்கோல் வட்டாரத்தில் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்த நபர் கைது…!!!
பொங்கோல் வட்டாரத்தில் Edgefield Plains, Punggol Drive, Punggol Road போன்ற பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தீச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குப்பைத்தொட்டியும், பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலாகியதை அவர்கள் கண்டனர். முதல் புகார் வந்த 10 மணி நேரத்துக்குள் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.