பேலியகொடையில் பாரிய தீ விபத்து…!!!
கொழும்பின் பேலியகொடையில் போரனுகொட்டுவ பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பேலியகொடை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் ஒன்றிணைந்து இந்த தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தினால் இந்தவொரு நபருக்கும் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் 14 வீடுகளுக்கு மாத்திரம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.