மார்பகங்களில் காயங்களுடன் சடலமாக மீட்கப் பட்ட 22 வயது யுவதியின் சடலம்..! தமிழ் நாட்டில் தொடரும் கொடூரங்கள்..!!
ஒடிஷாவில் இருந்து வந்து தமிழ்நாடு காஞ்சிபுரம் ஆதனஞ்சேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 22 வயதான தீபா என்ற பெண் கொடூரமான கொலை செய்யப் பட்ட சம்பவம் குறித்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதனஞ்சேரியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் ரஞ்சிதா மற்றும் தீபா தங்கி இருந்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று தீபாவின் விடுமுறை நாள் அதனால் ரஞ்சிதா வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரஞ்சிதா தீபா உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் உறங்குவதை பார்த்து அவரை எழுப்பியுள்ளார். ஆனால் தீபா எழுந்திருக்க வில்லை.
அதன் போது தீபாவின் முகத்தில் காயங்கள் இருப்பதை அவதானித்த ரஞ்சிதா உடனடியாக அயலவரின் உதவியுடன் வைத்திய சாலையில் சேர்த்துள்ளார். ஆனால் தீபா இறந்து 2 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தீபாவின் மார்பகங்கள், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்துள்ளது. இதனால் தீபா கழுத்து நெரித்து கொல்லப் பட்டிருக்கலாம் என சந்தேகித்த பொலீஸார் நடத்திய விசாரணையில் தீபா சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மனீஷ் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
தீபாவை பலமுறை மனீஷ் வெளியே செல்ல அழைத்தும் தீபா செல்வதில்லை, இதனால் வீட்டிற்கு வந்த மணீஷ் தீபாவை கொலை செய்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகப் படும் நிலையில் மனீஷ் தலைமறைவாகி உள்ளது சந்தேகத்தை உறுதிபடுத்தி உள்ளது..!!