இதில் சிறிதளவு பூசினால் போதும் தேமல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்..! படித்து பகிருங்கள்…!!
ஆவாரம் பூ எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய சாதாரண ஒன்று தான் ஆவாரம் பூ. ஆனால் இது எமக்கு ஆயிரம் அல்ல லட்சங்கள் சேமிப்பை கொடுக்கக் கூடியது. எத்தனை நோய்க்கு தீர்வாகிறது அதே போல் எத்தனை நோய் எதிர்ப்பு சக்திகளை தன்னுள் வைத்திருக்கிறது தெரியுமா? வாங்க உங்கள் பணத்தை எப்படி ஆவாரம் பூ சேமிக்கிறது என பார்க்கலாம்.
சர்க்கரை நோய்க்கு ஆவாரம் பூவை போல் சிறந்த மருந்து ஒன்று கிடையவே கிடையாது. ஆவாரம் பூ கிடைக்காதவர்கள் ஆவாரம் பூ தூளை கூட பயன்படுத்தலாம். ஆவாரம் பூ உள்ளவர்கள் காலையில் எழுந்து.. காய்ந்த ஆவாரம் பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு நாளைக்கு ஒரு கப் என குடித்து வந்தால் போதுமானது.
சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.!அடுத்து ஆவாரம் பூவை நன்றாக அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் விட்டு கழுவி வந்தால் ஒரு மாதத்தில் முன் வழுக்கை பிரச்சனை தீந்துவிடும். மல்லி விதை, பூசணி விதை, மற்றும் ஆவாரம் பூ இலைகள் மூன்றையும் நன்றாக அரைத்து தேமல்,படை, உள்ள இடத்தில் பூசி வர தேமல் வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
திருமண அல்லது ஏதேனும் விஷேட தினங்களில் அழகாக மாற வேண்டும் என்றால் ஆவாரம் பூவை அரைத்து எடுத்து அதனுடன் மஞ்சள், கடலை மாவு, எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் பூசி 10 நிமிடம் விட்டு கழுவினால் முகம் பளபளப்பாக இருப்பதுடன் தொடர்ந்து செய்து வந்தால் இயற்கையாகவே அழகிய நிறத்தை பெறலாம்..!