குடாகம பகுதியில் தளபாட உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து..!!
நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் உள்ள தளபாட உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து. இது தற்செயலாக நடந்தது என்று சிலர் கூறினார். ஆனால் பொலிஸார் விசாரணையின் போது சிலர்வேண்டுமென்றே தீ வைத்துள்ளனர் எனக் தெரியவந்துள்ளது. இந்த விபத்தானது இன்று காலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இவ் நிலையத்திற்கு தீ வைத்தது அங்கு வைக்கப்பட்ட சீ.சீ.டி.வீ கமராவில் பதிவாகியுள்ளது. இவ் விபத்து ஏற்பட்ட போது அங்கு வந்த ஹட்டன் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் பல மணி நேரத்திற்கு பின்னே அத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ் உற்பத்தி நிலையத்திற்கு, இனந்தெரியாத யாரோ தான் தீ வைத்திருக்ககூடும் என ஹட்டன் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.