சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்ய தீர்மானம்..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!
இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்த சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் இவர்களின் இந்த முடிவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர். இதனை கடுமையாக எதிர்த்தார்கள்.
இதனைத் தொடர்ந்து சிவன் கோயிலுக்கு வந்த அந்தப் பெண்கள் அங்கு இருந்த கோவில் பூசாரியிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். மேலும் இதை கேட்டு அதிர்ந்து போன கோவில் பூசாரி என்ன செய்வது என்று தெரியாமல் திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளார். ஆனால் அங்கேயே அமர்ந்த பெண்கள் திருமணம் செய்து கொண்ட பின்பு கோயிலை விட்டுக் சென்றார்கள்.
மேலும் சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டார் என்று கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பரவக் கோயிலில் கூட்டம் கூடினார்கள். ஆனால் அதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்ட பெண்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். இதுவே முதல் முதலில் வாரணாசியில் நடைபெறும் தன்பாலின திருமணம் எனவும் கூறப்படுகிறது.