தமிழகத்தில் அக்கா மற்றும் தங்கை ஆகிய இருவரையும் திருமணம் செய்தும் 16 வயது சிறுமி மீது ஆசைப்படும் நபர்…!!! இவையெல்லாம் என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க..!
இராமநாதபுரத்தை சேர்ந்த 40 வயதுடைய பாண்டி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தனது மாமன் மகள்களான 32 வயதுடைய தென்னரசி மற்றும் அவரது தங்கை 30 வயதுடைய தாமரைச்செல்வி ஆகிய சகோதரிகள் இருவரையும் சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கரிச்சான்குண்டு கிராமத்தில் முதல் மனைவி தனது மகளுடனும், பனைக் குளத்தில் இரண்டாவது மனைவி மகனுடனும் வசித்து வருகின்றனர். பாண்டி சில மாதங்களாக முதல் மனைவி வீட்டில் தங்கினார். அந்த வீட்டின் எதிரில் பாண்டியின் அக்கா தனது 3 மகள்களுடன் வசித்து வந்தார். இதனையடுத்து பாண்டி தனது அக்கா வீட்டிற்கு ஒரு நாள் தவறாமல் சென்று வந்த நிலையில் அக்காவின் 16 வயதுடைய மூத்த மகளுடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்களின் இந்த நெருக்கம் மேலும் அதிகரிக்க அவர் வாட்ஸ்-அப் மூலம் ஆசைவார்த்தை கூறி நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என குறுந்தகவல்களை அனுப்பி வந்தார். பின்னர் குறித்த சிறுமியை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்
பாண்டி கூறிய வார்த்தையை நம்பிய சிறுமி 31ம் திகதி வீட்டில் இருந்து சென்றார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். அதே நேரத்தில் பாண்டியும் தனது முதல் மனைவியின் மகளும், இரண்டாவது மனைவியின் மகனுடன் மாயமாகி இருந்தனர். இது முதல் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரின் உதவியின் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
பாண்டியின் செல்போன் நம்பரை வைத்து அவர் இருக்கும் இடத்தை அறிந்துள்ளனர். தஞ்சாவூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதை பொலிஸார் அறிந்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த பொலிஸார் லாட்ஜில் அறையின் கதவை திறந்து பார்த்த போது 16 வயது சிறுமி, மகன், மகளுடன் இருந்த பாண்டியை கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் 2 குழந்தைகளும் அவர்களது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் பொலிஸ் விசாரணையில் பாண்டி அளித்த வாக்கு மூலத்தில், 16 வயது சிறுமியை கடத்தி சென்று அவரை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் தஞ்சாவூருக்கு சென்ற அவர்கள் அங்குள்ள லாட்ஜில் தங்கி குடும்பம் நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாண்டியிடம் மேலதிக விசாரணையை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.