நாளைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் போட்டியாளர் இவர் தான், உறுதியான தகவல் இதோ..!!
பிக் பாஸ் வீட்டில் அடுத்த வார கேப்டனாக ஆரி தேர்வு செய்யப் பட்டார். ரியோ, சோம், ஆரி ஆகியோர் இந்த வாரத்தில் சிறப்பாக டாஸ்குகளை செய்து முடித்திருந்தனர்,இதனால் தேர்வு செய்யப் பட்ட நிலையில் இன்று நடந்த கேப்டன்சி டாஸ்கில் ஆரி வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.இதனால் ரசிகர்கள் இந்த வாரமும் அனிதா எஸ்கேப் ஆகிவிட்டார் என கூறினார்கள். வீட்டில் வரும் விஷேட நாட்களில் போட்டியாளர்களை வெளியேற்ற மாட்டார்கள், அதனால் இந்த வாரம் அனிதா காப்பாற்றப் பட்டு விடுவார் என ரசிகர்கள் கூறிவந்த நிலையில் இல்லை இந்த வாரம் கண்டிப்பாக எவிக்ஷன் உள்ளது என பிக் பாஸ் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.
இம்முறை நாமினேஷனில் வந்த போட்டியாளர்களில் ஆகக் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பவர் அனிதா சம்பத் தான். கடந்த வாரம் ஆரியுடன் சண்டை இட்டதால் அனிதா வெளியேற்றப் பட வேண்டும் என கூறி ஆரி ரசிகர்கள் செய்த செயலினால் unofficial பக்கங்களில் மட்டும் அல்ல official பக்கத்திலும் அனிதாவே குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிறார்.
அதனால் நாளைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேற்றப் படுவார் என்பது உறுதி படுத்தப் பட்டுள்ளது.!!