கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கைகளை சுத்தம் செய்யும் ரோபோக்கள்..! இது எந்த நாட்டில் தெரியுமா?
சீனாவின் ஹவுன் நகரில் பரவ தொடங்கிய கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த வைரஸால் நாளுக்கு நாள் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் கேரளாவிலுள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை கழுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Asimov Robotics எனும் ரோபோ தயாரிப்பு நிறுவனத்திலேயே இவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.