மக்களை அலரவிட்ட சிறுவர்களின் விளையாட்டுத்தனம்!
யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் மூன்று சிறுவர்கள் செய்த வேலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும், கலியுகமூர்த்தி மதுசன் (வயது10), புஸ்பகுமார் செல்வகுமார் (வயது 10), சந்தியோ தனுசன் (வயது 17) ஆகிய மூன்று சிறுவர்கள் நேற்று இரவு காணாமல் போயிருந்தனர்.
இதையடுத்து சிறுவர்களது குடும்பத்தினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
பின்னர், பெரும் தேடுதல் நடத்தப்பட்டது. ஆனாலும் சிறுவர்களைக் காணவில்லை. இந்தச் செய்தி பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை குறித்த சிறுவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்.
நேற்றுக் காலை காணாமல் போன மூன்று சிறுவர்களும், அருகிலுள்ள கோயில் ஒன்றின் மடத்துக்குள் நேற்று இரவு உறங்கியுள்ளனர். அவர்கள் உறங்கிய நிலையிலேயே இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
வெளியே நடப்பது தெரியாமல் அவர்கள் செய்த இந்த விளையாட்டுத் தனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.