கனடா ஒட்டாவாவில் துப்பாக்கி சூடு…!! மூவர் வைத்தியசாலையில் அனுமதி..!!
கனடாவில் ஒட்டாவாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூட்டில் 11, 18 மற்றும் 20 வயதான மூன்று இளைஞர்களே இவ்வாறு படுகாயம் அடைந்தார்கள்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.