பாலியல் சீண்டல்கள் என்பது தற்போது சாதாரண விடயமாக மாறிவிட்டது பலரது முன்னிலையில் கூட இவை இடம்பெறுகின்றமை வேதனைக்குறிய விடயமாக இருக்கிறது. மும்பையை சேர்ந்தவர் நடிகை துர்கா.. இவருக்கு நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தேவையற்ற வார்த்தைகள் அதிகமானதால் துர்கா குறித்த நபர் மீது பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அறிந்த பிரையன் ஃபிராங்கோ இரு சக்கர வாகனத்தில் துர்கா பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென தனது வாகனத்தால் துர்க்காவை மறித்துள்ளான்.
பின் புகார் கொடுத்ததற்காக திட்டியதுடன் கொடுமையாக தாக்கியதுடன் நடு வீதியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். பலத்த போராட்டத்தின் பின் துர்கா தப்பியுள்ளார். இது தொடர்பாக பொலீஸில் புகார் கொடுத்தார். இதனால் கைது செய்யப் பட்டார்.
வழக்கில் பொலீஸார் எதிர்ததால் முதலில் பிணை வழங்காத போதும் இரண்டாவது முறை பிணை வழங்கப் பட்டுள்ளது. நடு வீதியில் பலாத்காரம் செய்ய முயன்றவரை விடுதலை செய்தது தவறு என கூறி கொடூரன் பலாத்காரம் செய்ய முயன்ற வீடியோவை துர்க்கா வெளியிட்டுள்ளார். இதோ வீடியோ.!