மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை 7 மாதங்களாக சீரழித்த திமுக பிரமுகர்…!!!
திருச்சியில் புலிவலம் அருகே உள்ள கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த சிறுமியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட்டால் சிறுமியின் தாத்தா தான் சிறுமியை பாதுகாப்பாக கவனித்து கொள்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனே யாருக்கும் தெரியாமல் சிறுமியை வைத்தியசாலைக்கு கூட்டி சென்று பரிசோதித்து பார்த்ததில் குறித்த சிறுமி 6 மாதம் கர்ப்பிணி என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது 57 வயதுடைய முத்து, 51 வயதுடைய செல்வராஜ், 45 வயதுடைய ராமராஜ், மற்றும் பெரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக 2 முறை பொறுப்பு வகித்த திமுகவை சேர்ந்த 49 வயதுடைய செல்வராஜ் ஆகிய 4 பேரும் ஒன்றிணைந்து சிறுமியை கடந்த 7 மாதங்களாக கூட்டு வன்புணர்வுக்கு உற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து 4 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதோடு மேலும் 3 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
மேலும் இந்த சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு அவரது தாத்தாவும் இதில் உடந்தையாக, அல்லது அவருக்கே தெரியாமல் இந்த கொடுமை நடந்து வந்தத என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.