கொரோனா வைரஸ் உங்களை நெருங்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 மருத்துவ விடயங்கள் ! அதிகம் பகிருங்கள் அனைவரும் அறியட்டும்!!
கொரோனா வைரஸை ஆயுர்வேத அல்லது ஆங்கில மருத்துவங்கள், அல்லது சித்த மருத்துவங்களால் குணப்படுத்த முடியுமா.? அல்லது தடுப்பூசி மூலம் தடுத்து நிறுத்த முடியுமா என்ற கேள்விக்கு அனைத்து மருத்துவர்களின் பதிலும் இல்லை என்பதாகும். காரணம் மக்கள் தங்களை பாதுகாக்கக் கூடிய செயல்களை செய்யாவிட்டால் கண்டிப்பாக கொரோனா வைரஸை கட்டுப் படுத்த முடியாது இது தான் உண்மை நிலமை.
இது பற்றி டாக்டர் ஒருவர் கூறுகையில் சிலர் மாஸ்க் போட்டால் கொரோனா வராது, கை கழுவினால் கொரோனா வராது என்று நினைக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை, என்ன விடயம் செய்தால் எந்த அளவு கொரானா வைரஸில் இருந்து தப்ப முடியாது என்பது தொடர்பாக பகிர்ந்து கொள்கிறேன் என கூறியதுடன் டாக்டர் கூறிய விடயங்கள் இதோ.! “மாஸ்க் அணிதல்”முக கவசம் என்கிற மாஸ்க் அணிதலின் போது 10% வீதம் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக் கொள்கின்றீர்கள்.
எதிரில் இருப்பவரின் எச்சிலில் அல்லது அவரிடம் இருந்து வரும் கொரோனா வைரஸ் உங்கள் வாய், மூக்கு வழி உங்களுக்குள் நுழைவது தடுக்கப் படுகின்றது. அடுத்து “கை கழுவுதல்” வெளியே சென்று வந்ததும் நன்றாக கை கழுவுவதால் 10% வீத கொரோனாவில் இருந்து தப்பிக் கொள்கின்றீர்கள். கொரோனா நோயாளியினால் ஏதேனும் பொருளில் இருக்கும் கொரோனா உங்கள் கைகளில் ஒட்டியிருக்கும் போது அது வாயிக்குள் செல்வதற்கு முன் கையில் இருந்து விரட்டி அடிக்கப் படுகின்றது.
சானிடைஷர் பாவித்தல் கை கழுவ முடியாத இடங்களில் இதனை பாவிப்பதன் மூலம் 10% வீதம் கொரோனாவில் இருந்து தப்ப முடியும். இவை மூன்றையும் செய்யும் போது 30% வீதம் நீங்கள் கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்கின்றீகள். அதே நேரம் “சன நெரிசலை தவிர்த்தல்” மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விஷேட நிகழ்வுகளை தவிர்க்கும் போது நீங்கள் 30% வீதம் கொரோனாவில் இருந்து தப்பிக் கொள்கிறீர்கள்.
மாஸ்க் அணிந்து, கை கழுவி என்ன செய்தாலும் சன நெரிசலில் நீங்கள் இருந்தால் கொரோனா உங்களை தாக்காமல் விடாது, அதனால் சன நெரிசலை தவிர்த்து இவை அனைத்தையும் செய்யும் போது 60% வீதம் கொரோனாவில் இருந்து தப்பி விட்டீர்கள். அடுத்து தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் முக்கியமான ஒன்றாகும், பொது வாகனங்களில் செல்வதை முடிந்த வரை தவிர்க்கும் போது 10% வீதம் கொரோனாவில் இருந்து தப்ப முடியும்.
இவற்றுடன் இயற்கையான சக்தியான உணவுகள் எடுத்துக் கொள்வது, தடுப்பூசி எடுத்துக் கொள்வது,குளிரூட்டப்பட்ட அறைகளை முடிந்த வரை தவிர்ப்பது, தடுப்பூசி எடுத்துக் கொள்வது, டாக்டர்களின் அனுமதியுடன் ஆவி பிடிப்பது போன்றவை 30% வீதம் கொரோனாவை தடுக்கிறது. அதனால் மக்கள் இதை மட்டும் செய்தால் போதும், அதை மட்டும் செய்தால் போதும் என நினைக்காமல் முடிந்த வரை மேல் குறிப்பிட்ட அனைத்தையும் செய்யுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.!!