நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த விடயங்கள் கொரோனா வைரஸின் அறிகுறிகளாம்..! மக்களே உஷாராகுங்கள் அதிகம் பகிருங்கள்..!!
கொரோனா வைரஸ் உலகையே திருப்பி போட்டுக் கொண்டிருக்கின்றது. இரண்டாம் அலை மூன்றாம் அலை என முடிவின்றி தொடர்ந்துகொண்டிருக்கின்றது. உலக சுகாதார அமைப்பும் கொரோனா வைரஸை முற்றாக அழிப்பது கடினம் என கைவிரித்து விட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சில நாடுகள் வெற்றி பெற்று வருகிறது. எப்படி மருந்து கண்டு பிடித்தாலும் 2022ம் ஆண்டில் தான் மக்கள் பாவனைக்கு மருந்து வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சல், சளி, தலைவலி ஏதும் இல்லாமலும் ஏற்படுவதாக தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உடலில் சின்ன சின்ன பருக்கள் போல் முதலில் தோன்றி பின் அரிப்பாக மாறும் ஒருவித தோல் சம்மந்தப் பட்ட நோயும் கொரோனாவின் அறிகுறி என கூறப் படுகின்றது.
ஏற்கனவே தோல் நோய்கள் கொரோனா அறிகுறிகளாக அடையாளம் காணப் பட்ட நிலையில் சாதாரண அரிப்பு ,சாதாரண பருக்கள் என நினைக்கும் தோல் நோய்களும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் என கூறப் படுகின்றது. இதன் பின்னரே காய்ச்சல் மூச்சத் திணறல் போன்றவை ஏற்படுகின்றது..!!