இன்றைய ராசி பலன்! 20 .09.2019
புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
20.09.2019 புரட்டாதி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்கிழமை. ஷஷ்டி பின் பகல் 4.46 வரை கார்த்திகை, சித்தம் முன் பகல் 8.17 வரையாகும். சுப நேரம் காலை 6.03 – 7.33 வரையாகும். எமகண்டம் மதியம் 3.03 – 4.33 வரையாகும். இராகுகாலம் காலை 10.33 – 12.03 வரையாகும். குளிகன் இரவு 7.33 – 9.03 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக்கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய வீடு வாங்குவீங்கள். பழைய நண்பர்களை சந்திப்பீங்கள். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: உங்கள் ராசியில் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப்போகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இன்றைய நாள் பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: நீங்கள் நினைத்த காரியத்தை விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப்போங்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். கல்வியில் பிள்ளைகள் சிறந்து விளங்குவார்கள். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு நடைபெறும். அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. புதிய நண்பர்களை சந்திப்பீங்கள். இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சகோதரர்கள் நலனில் அக்கறை கொள்ளவும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். தாயின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் புது அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப்போங்கள். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். அடுத்தவருக்கு கொடுத்து வாக்கை காப்பாற்ற முடியும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். வெளிநாட்டு யோகம் ஏற்படும். இன்றைய நாள் சிக்கனம் தேவைப்படும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:. உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். பழைய நண்பர்களை சாதித்து மகிழ்வீங்கள். நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். முக்கிய காரியங்களில் பொறுமையை கையாளவும். சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பர். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: நீங்கள் தடைகளை தாண்டி முன்னேறுவீங்கள். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் மோதல் ஏற்படும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி மதிப்பார்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பெரியோர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.