இன்றைய ராசி பலன்! 05.11.2019
புரட்சி சொந்தங்களே அன்பான காலை வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
05.11.2019 ஐப்பசி மாதம் 19 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். அட்டமி முன் பகல் 7.52 வரை திருவோணம் காலை 6.39 வரையாகும். சுப நேரம் காலை 10.34 – 12.04 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.04 – 4.34 வரையாகும். எமகண்டம் காலை 9.04 – 10.34 வரையாகும். குளிகன் 12.04 – 1.34 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: நீங்கள் தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுக ளால் கையிருப்பு குறையும். குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். எதிரிகளின் பலம் குறையும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியில் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சற்று கூடுதல் கவனம் தேவைப்படும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.
கடக ராசி நேயர்களே: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியபாரத்தில் நிறைய சாதிக்க முடியும். நண்பர்களுக்கு பண உதவி செய்ய நேரிடும். பெண்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். உத்தியோகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பணிகளைச் செய்வீர்கள். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. புது வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் சக பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இன்றைய நாள் பொறுமையுடன் இருக்கும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவீங்கள். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தம்பதியினருக்கு இடையில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் பேச்சில் அனைவரையும் கவருவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திடீர் பயணங்கள் ஏற்படும். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். பழைய நண்பர்களை சந்திக்க கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டி வரும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.
/span>
தனுசு ராசி அன்பர்களே: காதல் திருமணம் வெற்றி அடையும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கவும். தள்ளி போன காரியங்கள் உடனே முடியும். தம்பதியினருக்கு இடையில் இருந்த மனஸ்தாபம் நீங்கும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். இன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாகும்.
மகர ராசி காரர்களே: பிள்ளைகளால் தேவை யற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உயரும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் பெருகும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். வியாபாரத்தில் திடீர் இலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். இன்றைய நாள் புதிய முயற்சி தொடங்கும் நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். புதிய நபர்களின் சிநேகிதம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. இன்றைய நாள் வெற்றியடையும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதரர் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். ஆன்மீக சிந்தனை அதிகாரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும். இன்றைய நாள் உற்சாகம் ஏற்படும் நாளாகும்.