இன்றைய ராசி பலன் – 01.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 01-01-2021, மார்கழி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 09.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூசம் நட்சத்திரம் இரவு 08.15 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆங்கில வருட பிறப்பு. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
வெளியூர் பயணம் உண்டு. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள் . பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.இன்று சிவபெருமானை வழிபடுவது நன்று.
ரிஷப ராசி அன்பர்களே:
சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். பிற்பகலுக்குமேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:
நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு.
கடக ராசி நேயர்களே:
தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தந்தையுடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்ம ராசி அன்பர்களே:
யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்.
கன்னி ராசி காரர்களே:
திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.விட்டுக்கொடுத்துப் போங்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
துலாராசி உறவுகளே:
வேற்று மதத்தவர் உதவுவார். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.பெற்றோரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
விருச்சிக ராசி நேயர்களே:
ஓரளவு சேமிக்க முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்,வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக்கு வரும்.
மகர ராசி காரர்களே:
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.சுப செலவுகள் செய்ய நேரிடும்.