இன்றைய ராசி பலன் – 01.07.2020
இன்றைய பஞ்சாங்கம்,01-07-2020, ஆனி 17, புதன்கிழமை, ஏகாதசி திதி மாலை 05.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.34 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.நண்பர்களால் உதவி உண்டு.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். லகலப்பான சூழல் உருவாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:
குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற் பட்டு நீங்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:
வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.பெரியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிள்ளைகளுக்காகச் செலவு செய்யவேண்டிவரும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடக ராசி நேயர்களே:
குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலனில் கவனம் தேவை.பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும்.மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே:
குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.புதிய முயற்சிகள் பலிதமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும்.
கன்னி ராசி காரர்களே:
சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
துலாராசி உறவுகளே:
சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்பட லாம். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மனஉளைச்சலை கொடுக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பேச்சில் முதிர்ச்சி இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும்.பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும்.பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
மகர ராசி காரர்களே:
காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வர். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டிவரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலைச்சல் உண்டாகும்.. வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து கொள்ள வேண்டாம்.பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.