இன்றைய ராசி பலன் – 02.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 02-01-2021, மார்கழி 18, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 09.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.17 வரை பின்பு மகம். மரணயோகம் இரவு 08.17 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர்-நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:
பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும்.குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும்.இளைய சகோதரர்கள் மூலம் சில சங்க டங்கள் ஏற்பட்டு நீங்கும்.புது வாகனம் வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும்.குடும்ப உறுப்பி னர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள்.அரசால் ஆதாயம் உண்டு.
மிதுன ராசி காரர்களே:
தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. திர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும்.
கடக ராசி நேயர்களே:
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். சிலரின் தவறுகளைசுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.
சிம்ம ராசி அன்பர்களே:
தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும்.
கன்னி ராசி காரர்களே:
பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும்.
துலாராசி உறவுகளே:
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை தற்பொழுது சந்திக்க நேரிடும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். மன இறுக்கம் நீங்கி நிம்மதி உண்டாகும்.உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும்.மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும்.தாய்மாமன்வழியில் செலவுகள் ஏற்படும்.எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
மகர ராசி காரர்களே:
பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள்.புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.