இன்றைய ராசி பலன் – 02.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 02-03-2021, மாசி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.59 வரை பஞ்சமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.29 சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே:
நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப் பார்கள் விட்டுப்பிடித்துச் செல்லவும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தேவைக்கேற்ப பண வரவு உண்டு.
மிதுன ராசி காரர்களே:
பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போகும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.வீண் செலவுகள் ஏற்படலாம்.
கடக ராசி நேயர்களே:
சொத்து வாங்குவது விற்பது சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.வீண் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.கணவன் – -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:
அடுத்தவர்களை குறைக் கூறுவதைநிறுத்துங்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.கோபத்தால் இழப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பழைய கடன்கள் வசூலாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாராசி உறவுகளே:
ஆரோக்கிய ரீதியாகவும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும்.விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம்.பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும்.
விருச்சிக ராசி நேயர்களே:
பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.இன்று குடும்பம் தொடர்பான பிரச்னையை பேசி முடிவுக்குக் கொண்டுவர உகந்த நாள்.பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். சிலருக்கு குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்.
தனுசு ராசி அன்பர்களே:
திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும், மகிழ்ச்சி நிலவும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
மகர ராசி காரர்களே:
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள்.அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.
கும்ப ராசி உறவுகளே:
ராசிக்கு மாலை 04.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு பிரச்னை ஒன்று ஏற்படும்.லரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு மாலை 04.29 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும்.தந்தையுடன் அனுசரித்துச் செல்வது அவசியம்.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.