இன்றைய ராசி பலன் – 03.01.2021
இன்றைய பஞ்சாங்கம், 03-01-2021, மார்கழி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.23 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் இரவு 07.56 வரை பின்பு பூரம். மரணயோகம் இரவு 07.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:
சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம்.
ரிஷப ராசி அன்பர்களே:
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
மிதுன ராசி காரர்களே:
சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
கடக ராசி நேயர்களே:
உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.விலகிச்சென்ற உறவினர்கள்வலிய வந்து பேசுவார்கள். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.
சிம்ம ராசி அன்பர்களே:
குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும்.ஆரோக்கிய ரீதியாக சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:
சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக் குகள் நீங்கும்.ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள்.வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:
ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.நேர்மறை சிந்தனை பிறக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சில ருக்கு ஏற்படும்.றவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும்.
கும்ப ராசி உறவுகளே:
உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். நண்பர் களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங் கள் நீங்கும். தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
மீன ராசி நேயர்களே:
திடீர் திடீரென்று அறிமுகமாகு பவரால் பயனடைவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.திடீர் திடீரென்று அறிமுகமாகு பவரால் பயனடைவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள்.