இன்றைய ராசி பலன் – 03.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 03-03-2021, மாசி 19 , புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 01.35 விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.மனைவி வழியில் மதிப்பு கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.சுப செய்திகள் வந்து சேரும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் பணிந்து வருவார்கள்.வாகனத்தை சீர் செய்வீர்கள். தெய்வவழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள் பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.
கடக ராசி நேயர்களே:
பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.பணவரவு சற்று குறைவாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்து செல்லும். குடும்பத் தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே:
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.பேச்சில் முதிர்ச்சி தெரியும்.திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும்.தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வாடிக்கையாளர்கள் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள்.
கன்னி ராசி காரர்களே:
சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் செலுத்தவும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.
துலாராசி உறவுகளே:
குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள்.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
பயணங்களால் ஆதாயம் உண்டு.பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல் வது நல்லது.உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மகர ராசி காரர்களே:
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்குள் நிம்மதி பிறக்கும்.
கும்ப ராசி உறவுகளே:
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கண வன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.புதியவர்கள் நண்பர்களாவார்கள்.பொருளாதார நெருக்கடி ஓரளவு குறையும்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.