இன்றைய ராசி பலன் 03.06..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.03-06-2019, வைகாசி 20, திங்கட்கிழமை, அமாவாசை திதி பகல் 03.32 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.05 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 12.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷராசி நேயர்களே: சகோதரர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள்..விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாலையில் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
ரிஷபராசி அன்பர்களே:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லை அதிகரிக்கும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள்.சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார்.
மிதுனராசி காரர்களே:உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும் கணவன்-மனை விக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
கடகராசி நேயர்களே:சிலருக்கு தாய்வழி உறவுக ளால் ஆதாயம் உண்டாகும்.விருந்தினர்களின் வருகை யால்வீடு களைக்கட்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மராசி அன்பர்களே:சிலருக்கு நவீன டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும்.கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.டும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
கன்னி ராசி காரர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள்.வெளியில் செல்லும்போது கைப்பொருள் களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
துலாராசி உறவுகளே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது..உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். சிலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடுவதால் உடல் அசதி உண்டா கும்.எதிலும் கவனம் தேவை.
விருச்சிகராசி நேயர்களே:பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.உடல் நலனில் கவனமாக இருப்பதுடன் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும்.
தனுசுராசி அன்பர்களே:குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும்.குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.
மகரராசி காரர்களே:உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.
கும்பராசி உறவுகளே:உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. சிலருக்கு திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயமும் உண்டா கும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.டும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.
மீனராசி நேயர்களே:குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள்.உத்தியோகத்தில் கடினமான காரியங்களை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.