இன்றைய ராசி பலன் – 05.02.2022
இன்றைய பஞ்சாங்கம்,05-02-2022, தை 23, சனிக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.47 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.08 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் மாலை 04.08 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வஸந்த பஞ்சமி. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே:சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும் .மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. காரமான உணவுகளைத் தவிர்க்கவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.அரசாங்க அதிகாரி களால் காரிய அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். சகோதர வகை யில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும்.புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடக ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வேலையில் சக ஊழியர்களுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்வது நல்லது.. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.மற்றவரிடம் வெளிப்படையாக பேசுவதாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும்.கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். மனைவி வழியில் ஆதரவு பெருகும்.
துலாராசி உறவுகளே:கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். முக்கி யப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.மனைவி வழியில் ஆதரவு பெருகும்.
விருச்சிக ராசி நேயர்களே:செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி அன்பர்களே:தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சகோதரர்களை அனுசரித் துச் செல்லவும்.நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பார்த்தவைகளில் சிலதள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மகர ராசி காரர்களே:சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும்.தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.
கும்ப ராசி உறவுகளே:ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பணவரவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் நிறைவேறும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
மீன ராசி நேயர்களே:
சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.வழக்கமான பணிகளிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.சிறுசிறு அவமானம் ஏற்படும். மாலையில் உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.திடீர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.