இன்றைய ராசி பலன் – 05.10.2021
இன்றைய பஞ்சாங்கம்,05-10-2021, புரட்டாசி 19, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.04 வரை பின்பு அமாவாசை. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.10 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.10 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. போதாயண அமாவாசை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும்.அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். தொடங்கும் காரியம் இழுபறியானாலும் அனுகூலமாக முடியும்.ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக் கும்.
மிதுன ராசி காரர்களே:மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற் படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
கடக ராசி நேயர்களே:பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.
சிம்ம ராசி அன்பர்களே:அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக் கும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.வியாபாரத்தில் திடீர் லாபம் முன்னேற்றம் உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடை பெறும்.
கன்னி ராசி காரர்களே:கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள்.வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும்.யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.ஆடம்பர பொருட்களை வாங்குவதில் கவனமுடன் இருப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
துலாராசி உறவுகளே:பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.எதிர்பாராத ஆதாயங்களுக்கு வாய்ப்பு உண்டு. அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபர்களின் தலையீட்டை கண்டிப்பாக அனுமதிக்கவேண்டாம்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடி யும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் ஊக்கத்து டன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
தனுசு ராசி அன்பர்களே:உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள்.நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மகர ராசி காரர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் சூழ்நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். தேவை யற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம்.பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். சற்று சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மன நிம்மதி குறையும். . உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும்
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உணவு விஷயத் தில் கவனமாக இருக்கவும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும்.