இன்றைய ராசி பலன் – 06.02.2022
இன்றைய பஞ்சாங்கம், 06-02-2022, தை 24, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 04.38 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரேவதி நட்சத்திரம் மாலை 05.09 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் மாலை 05.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் நிதானம் தேவை.குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம்.
ரிஷப ராசி அன்பர்களே:பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும்.மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப் பார்கள்.
மிதுன ராசி காரர்களே: கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
கடக ராசி நேயர்களே:குடும்பத்தில் நிம்மதி குறையக் கூடிய சூழ்நிலை உருவாகும்.தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும்.உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு மாலை 5.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு மாலை 5.09 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த காரி யம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.
துலாராசி உறவுகளே:தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.மற்றவர்களால் பயனடைவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும்.தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
தனுசு ராசி அன்பர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:தாயாருக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும்.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார் கள். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்ப ராசி உறவுகளே: பண பற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும்.
மீன ராசி நேயர்களே:
உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும்.மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.