இன்றைய ராசி பலன் 06.06..2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.06-06-2019, வைகாசி 23, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 09.55 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.28 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் இரவு 08.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷராசி நேயர்களே:தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு அலுவலகப் பணிகள் தொடர்பான வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
ரிஷபராசி அன்பர்களே:சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும்.
மிதுனராசி காரர்களே: மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகராசி நேயர்களே:நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும்.மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும்.
சிம்மராசி அன்பர்களே:முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
கன்னி ராசி காரர்களே: உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.நட்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.உடன்பிறந்தவர்கள் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.
துலாராசி உறவுகளே:பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படக்கூடும்.மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அலுவலகப் பணியின் தொடர்பாகக் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
விருச்சிகராசி நேயர்களே:மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சுப முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் பிரச்னை ஏற்படக்கூடும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.
தனுசுராசி அன்பர்களே:அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
மகரராசி காரர்களே:வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் சிறு தடை ஏற்படக்கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள்.ம். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சமாளிப்பீர்கள். வரவும் செலவும் சமமாகவே இருக்கும்.
கும்பராசி உறவுகளே: மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும்.ள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனராசி நேயர்களே: புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது.எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.நீங்கள் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.