இன்றைய ராசி பலன் – 06.08.2021
இன்றைய பஞ்சாங்கம்,06-09-2021, ஆவணி 21, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 07.39 வரை பின்பு அமாவாசை. மகம் நட்சத்திரம் மாலை 05.51 வரை பின்பு பூரம். மரணயோகம் மாலை 05.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை.உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.வேற்றுமதத்தவர் நண்பர்களாவார்கள்.பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.
ரிஷப ராசி அன்பர்களே:பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங் கள் ஏற்படக்கூடும்.வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-. தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
மிதுன ராசி காரர்களே:குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள்.சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தந்தையின் தேவைக்காக செலவு செய்யவேண்டி வரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.
கடக ராசி நேயர்களே:வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்.அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகன பழுது பார்ப்பதற்காக சிறு தொகை செலவிட நேரிடும்.குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப் பது நல்லது.வரவேண்டிய பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும்.குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும்.குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். மனஇறுக் கம் நீங்கி நிம்மதி உண்டாகும்.வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாராசி உறவுகளே:உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள்.உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரம் வழக்கம்போல நடை பெறும்.எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.அவ்வப்போது சற்று சோர்வு உண்டாகும்.உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள்.உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
மகர ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும்.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும்.குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.மன உளைச்சல் அதிகமாகும்.
கும்ப ராசி உறவுகளே:சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண் டாகும்.உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். முயற்சிகள் சாதகமாகும்.மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
அரசு வழியில் அனுகூலம் உண்டாகும்.தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.