இன்றைய ராசி பலன் – 07.02.2022
இன்றைய பஞ்சாங்கம், 07-02-2022, தை 25, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 06.16 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ரத சப்தமி விரதம். (திருக்கணிதம்) சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
மிதுன ராசி காரர்களே:நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும்.வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும்.அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.
கடக ராசி நேயர்களே:மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.பிள்ளைகளின் செயல்பாடுகள் வீட்டில் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்.குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தந்தைவழி உறவுகளால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும்.
துலாராசி உறவுகளே:மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும்.வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பணவரவு தாரளமாக இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொண்டாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது.பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
மகர ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை.உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். மாலையில் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும்.
கும்ப ராசி உறவுகளே:பண நெருக்கடியால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. சகோதரர்களுக்காக சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும்.சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
மீன ராசி நேயர்களே:
கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வார்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.