இன்றைய ராசி பலன் – 07.08.2020
இன்றைய பஞ்சாங்கம், 07-08-2020, ஆடி 23, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹா சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.திருமண முயற்சிகளில் இடையூறு ஏற்படும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
ரிஷப ராசி அன்பர்களே:
ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:
எதிலும் நிதானம் தேவை. உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.பணவரவில் இருந்த தடைகள் விலகும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.
கடக ராசி நேயர்களே:
வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
சந்திராஷ்டமம் இருப்பதால் சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும்.தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும்.தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கன்னி ராசி காரர்களே:
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். தாய்மாமன் வழியில் சுபச் செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும்.
துலாராசி உறவுகளே:
பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள்.சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிட்டும்.
விருச்சிக ராசி நேயர்களே:
வரவை விட செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மகர ராசி காரர்களே:
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்ப ராசி உறவுகளே:
உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்க வேண்டாம்.பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மீன ராசி நேயர்களே:A
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவும் திடீர் செலவுகளும் ஏற்படும்.உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.