இன்றைய ராசி பலன் – 09.09.2020
இன்றைய பஞ்சாங்கம், 09-09-2020, ஆவணி 24, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பகல் 11.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
ரிஷப ராசி அன்பர்களே:
உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும்.கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.திடீர் பணவரவுகள் உண்டாகும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உங்களுடைய முயற்சிக்குக் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.
கடக ராசி நேயர்களே:
உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.யாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள்
கன்னி ராசி காரர்களே:
எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். நீண்ட நாட்களாகதள்ளிப் போன காரியங்கள் முடியும். உடல் நலனில் கவனம் தேவை.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
விருச்சிக ராசி நேயர்களே:
மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை முயன்று முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.உறவினர்கள் மதிப்பார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். மாலையில் உறவினர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
தனுசு ராசி அன்பர்களே:
உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடரும். பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள்.
மகர ராசி காரர்களே:
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும்.தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.
மீன ராசி நேயர்களே:
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகர மாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.