இன்றைய ராசி பலன் – 09.11.2020
இன்றைய பஞ்சாங்கம், 09-11-2020, ஐப்பசி 24 , திங்கட்கிழமை, அஷ்டமி திதி காலை 06.51 வரை பின்பு நவமி திதி பின்இரவு 05.28 வரை பின்பு தேய்பிறை தசமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.42 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 08.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும்.குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
மிதுன ராசி காரர்களே:
சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வேற்று மதத்தவர் உதவுவார். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.
கடக ராசி நேயர்களே:
உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம்.அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும்.
சிம்ம ராசி அன்பர்களே:
சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கன்னி ராசி காரர்களே:
உடனிருப்பர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
துலாராசி உறவுகளே:
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும்.மனஇறுக்கம் நீங்கி நிம்மதி உண்டாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:
பிரபலங்கள் உதவுவார்கள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
உடல் நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக் கட்டும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது சற்று சோர்வு உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம்.கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
கும்ப ராசி உறவுகளே:
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். முயற்சிகள் சாதகமாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
மீன ராசி நேயர்களே:
நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.