இன்றைய ராசி பலன் – 11.05.2021
இன்றைய பஞ்சாங்கம்,11-05-2021, சித்திரை 28, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி இரவு 12.29 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் இரவு 11.31 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும் . திடீர் என்று நல்ல செய்தி வரும்.குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
சிம்ம ராசி அன்பர்களே:சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலர் வீட்டிலேயே தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள் அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
துலாராசி உறவுகளே:தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே: நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:சுப காரியங்கள் கைகூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
கும்ப ராசி உறவுகளே:வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலருக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.நண்பர் களால் ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.