இன்றைய ராசி பலன் – 11.11.2020
இன்றைய பஞ்சாங்கம், 11-11-2020, ஐப்பசி 26, புதன்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 12.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரம் நட்சத்திரம் காலை 06.28 வரை பின்பு உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 04.25 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:
அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.
மிதுன ராசி காரர்களே:
அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அலட்சியம் வேண்டாம்.வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
கடக ராசி நேயர்களே:
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். அலைச்சல் கோபம் யாவும் நீங்கி மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
சிம்ம ராசி அன்பர்களே:
சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.
கன்னி ராசி காரர்களே:
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும்.
துலாராசி உறவுகளே:
எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் இருந்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். நம்பிக்கைக்குரிய ஒருவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும்.
தனுசு ராசி அன்பர்களே:
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.பழைய பிரச்சினைகளுக்கு புதிய முறையில் தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகர ராசி காரர்களே:
பகல் 12.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும்.சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தம் அடைவீர்கள்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்.
கும்ப ராசி உறவுகளே:
ராசிக்கு பகல் 12.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப் படுத்தும்.மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும்.வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். .
மீன ராசி நேயர்களே:
ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி வரும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.